முப்பலி கருப்பர்

கருப்பர் என்றாலே தோன்றுவது பெரிய கருத்த உருவம்,பெரிய மீசையுடன்,கண்கள் பெரிதாக அரிவாளு டன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் குல தெய்வம். இவரும் அத்தகைய வகையை சேர்ந்தவர் என்றாலும் இவர் உருவ பிரதிஸ்டை சற்று வித்தியாசம். முகம் மற்றும் பெரிய அரிவாள்கள் இருபக்கமும் அமைந்து வைரவன் பட்டியில் அருள் பாலிக்கிறார். இவர் எதையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்.

முப்பலி கருப்பர் சன்னதி; இது வெளிப்பிரகாரத்தில், குளத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. (Source: Author)

இவர் “முப்பலிக் கருப்பர்” என்று அழைக்கப்படுவார். ஆடு, கோழி, சேவல் என்று மூன்றையும் ஒன்றாக பலி கொடுப்பதால் இவரின் பெயர் ” முப்பலிக்கருப்பர்” என்றாயிற்று. இவருடைய சிறப்பு என்னவென்றால் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி வைப்பார். நல்லது மட்டும்; கெட்டதுக்கு துணை போக மாட்டார்.

நடக்க வேண்டும் என்று நினைப்பதை ஒரு காகிதத்தில் எழுதி அத்துடன் தட்சணை ( முடிந்த அளவு) வைத்து பூசாரியிடம் கொடுக்கவும். அதை அந்த நேரத்தில் சாமி பாதத்தில் வைத்து விடுவார். அதை படிப்பதற்கு என்று இருக்கும் பூசாரிகள் இரவு சாமி இடம் வாசிப்பார்கள்.அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை.

“நம்பிக்கை வையுங்கள்,நிச்சயம் நடக்கும். சாமியின் அருளால் நல்லதே நடக்கட்டும்.”

Shwetasaras ‘ Dance competition – Zee Champs – “Navabhavas Natyapalli” -Singapore and Malaysia

Shwetasaras’s Dance competition performance was conducted by ZEE CHAMPS in Singapore and Malaysia. It was broadcasted on 15th Aug’ 21, in these two countries. Got selected in the top 13 participants out of 200+ contestants.

Shweta is learning Bharathanattiyam in a school by the name “NAVABHAVAS Natyapalli” which is in Singapore and her teacher’s name is Raji.

They do conduct online classical dance sessions. Please contact her @ “https://navabhavas.wixsite.com/viswa” if interested to learn classical dance skill.

Shweta’s video for your eyes!!

Enjoy watching her dance & reviews from the masters!!

கலாமுக்கு என் கவிதை….

கலாமுக்கு என் கவிதை….by Ramachandran Shanmugam

உன் ஆசையாக 2020…

எங்கள் கனவாக 2020!!!

உன் குறிக்கோளாக இந்திய வல்லரசு…

எங்களது கடமையாக இந்திய வல்லரசு!!!

சாதனை நிகழ்த்தும் ஆசானாய் நீ…

உன்னை கற்கும் மாணவனாய் நான்!!!

ஒற்றுமையில் வேற்றுமை கண்ட நேரத்தில்…

வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டினாய்….

இன்றைய  இந்திய விண்வெளி வீரர்கள் ஆயிரம்…

என்றும் விண்வெளி நாயகனாய் நீ…

தமிழ் அறியா புது உலகில்…

ஆற்றினாயே சொற்பொழிவு செம்மொழியில்…

வெற்றியின் களைப்பில் உறங்கிய எங்களை….

தோல்வியின் அருமையை உணர்த்தினாய்…

நாட்டின் வல்லமையை அறிந்தாய்…

அது இளைஞன் என உணர்ந்தாய்!!!

2002ல் முதல் குடிமகன் ஆனாய் நீ…

என்றும் எங்களின் முன்னோடியாய் நீ…

எங்கள் தாத்தாக்களின் அடையாளமாய் காந்தி…

என்றும் இளைஞர்களின் அடையாளமாய் நீ…

உன் கனவை நினைவாக்கும் இத்தருணத்திலே…

காந்தியைக் காணச் சென்றாயோ சொர்கத்திலே!!!

கல்வியின் அவசியத்தை உணர்த்திவிட்டு…

காமராசரை காண சென்றாயோ!!!

-Ramachandran Shanmugam

OUOWA – INDEPENDENCE DAY – DRAWING COMPETITION – KIDS

Amazing creativity of the kids!! Kudos to their parents for encouraging extra curricular activities !! Appreciate OUOWA for organizing this !! Thank you Asha for sharing the great skills here !! Let us enhance and motivate the aspirants!!

Rice Flag

Our Indian Tricolor Flag !! Richest & Healthy Flag. Made up of Coriander leaves, rice bed, Carrot scrambles on top of that. Potato curry as Chakra. Flag hoisted in a Banana stick and served in a Banana leaf. – Creator: Asha Venugopal.

Unity in Diversity

Pictures followed by her Video!!

Viveka’s Project – Independence Day
Viveka with her project !!

Her speech in the video!! Immense Talent!! Please do watch it till end!!

உரையாடல்

நான் கேள்வி கேள் என்றேன் …

நீ பதில் தெரியும் என்றாய்…

நான் யோசித்துப்பார் என்றேன்…

நீ சரியாகத்தான் இருக்கும் என்றாய்…

நான் அது கெட்டது என்றேன்…

நீ அதில் நன்மையும் அடக்கம் என்றாய்…

நான் அறிவை தேடு என்றேன்…

நீ அன்பே போதும் என்றாய்…

நான் சொல்வதை கேட்டிருந்தால் உயர்ந்திருப்பாய் என்றேன்…

நான் உயரத்தில் தானே இருக்கிறேன் என்றாய்…

மூளைக்கும் இதயத்துக்குமான உரையாடல்…

-கும. நாச்சாள்.(nachu honey)

முதல் சமையல்

முழுவதுமாக சுற்றிப்பார்காத சமையலறையின்

முதல் பயணம்.

காணொலி காட்டும் விசயங்களை தேடி…

அறுசுவையையும் நா சுவைவுணரச் செய்த

அம்மாவின் வழியில்…

இல்லை அம்மாவைவிட மேலோங்குவேன்

என்ற குட்டி ஆணவத்தில்…

தாலிப்புசாமானையும் வாசனைசாமானையும்

தேடி சிலநேரம்…

மஞ்சத்தூளையும் மிளகாய்த்தூளையும்

தேடி சிலநேரம்…

சமையலறையில் சொதப்பிவிடுவோமோ என்ற யோசனையில் பலநேரம்…

ஒருபுறம் காய்போடலாமா என்ற சந்தேகம்!

பிறகு காய் வெந்ததா என்ற சந்தேகம்!

கண்டிப்பாக உண்ண வேண்டுமா என்ற சந்தேகம்!

காணொலி சரி தானா என்ற சந்தேகம்!

மறுபுறம் உற்சாகத்தை ஊட்டும் துள்ளல் இசையும்

கண்கவரும் காணொலி உணவும்

மூக்கைத் துளைக்கும் சமையல் வாசமும்

நானே செஞ்சது என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும்!

அன்னை கற்பிக்க முயன்று தோற்றதைகூட

கொரோனா கற்கொடுத்து விட்டது.

பொறுமையும்,ஆசையும் இருந்தால் சமையலும் எளிதுதான்!!

-கும.நாச்சாள் (nachu honey)

மல்லிகை

மலர்களில் தனித்துவமாய்..

மங்கைக்கே உரித்தானதாய்..

நறுமணத்தில் மங்காததாய்..

என்றும் உரித்தானதாய்…

அனைவருக்கும் பிடித்ததாய்…

மனதில் விளங்கும் மல்லிகை!!

By கும.நாச்சாள் (nachu honey)